Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வெற்றி சென்னையினருக்கு: ஆட்ட நாயகன் பிராவோ!

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (14:04 IST)
ஐபிஎல் போட்டிகள் நேற்று வண்ண நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தொடங்கியது. முதல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
 
சிஎஸ்கே அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான வாட்சன், ராயுடு, ரெய்னா, தோனி ஆகியோர் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த நேரத்தில் களமிறங்கிய பிராவோ அதிரடியாக 30 பந்துகளில் 68 ரன்கள் அடித்து வெற்றி நோக்கி அணியை அழைத்து சென்றார். இறுதியில் ஜாதவ் அணியை வெற்றி அடைய செய்தார். 
 
ஆட்ட நாயகனாக பிராவோ தேர்வு செய்யப்பட்டார். இதன்பின் பேட்டியளித்த பிராவோ இந்த வெற்றி என்னால் மட்டும் சாத்தியமாகவில்லை. இது ஒரு குழு வெற்றி. சென்னை வீரர்கள் எல்லோருக்கும் இதில் பங்கு இருக்கிறது. இப்படி அதிரடியாக ஆட வேண்டும் என்று நீண்ட நாட்களாக திட்டம் போட்டு இருந்தேன். அது இன்று நடந்துவிட்டது. 
 
இந்த வெற்றியை நான் சென்னை ரசிகர்களுக்கு சமர்பிக்க விரும்புகிறேன். அவர்கள்தான் இரண்டு வருடமாக இப்படி ஒரு வெற்றிக்கு காத்து இருந்தது. சென்னை மக்களுக்குத்தான் இந்த வெற்றி சேரும். சிஎஸ்கே அணி என்னை அதிகம் நம்பியது, அதற்காக இப்படி ஆடினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments