Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி அடிக்கடி இரவு - பகல் டெஸ்ட்தான்! - கங்குலியின் ஆசை!

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (13:09 IST)
இனி டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியாவது பகல் - இரவு போட்டியாக இருக்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியா  - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது டெஸ்ட் பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்றது. மேலும் அதில் முதன்முறையாக இந்தியா பிங்க் நிற பந்தில் விளையாடியது. இருப்பினும் தனது அபாரமான ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த பகல் - இரவு ஆட்டங்கள் ரசிகர்களிடையேயும் ஒரு ஈர்ப்பை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ”பகல் -இரவு போட்டிகள் எனக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. இது நிச்சயமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். அணி வீரர்களும் இதுபோன்ற ஆட்டங்களில் பங்கெடுத்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பிங்க் பந்து முறையையும், பகல் - இரவு ஆட்டத்தையும் வேறு சில போட்டிகளில் முயர்சித்து பார்க்கும் எண்ணம் உள்ளது.” என்று கூறியுள்ளார்.

இதேபோல வேறு ஒரு பேட்டியில் பேசிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி “பகல் - இரவு ஆட்டங்கள் எப்போதாவது நடத்தினால் மட்டும்தான் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments