Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை பெற்றுக்கொடுத்த டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசு

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (15:31 IST)
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 12வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றதை பிசிசிஐ பரிசு தொகை அறிவித்துள்ளது.

 
12வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர் முடிவில் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி நான்காவது முறையாக உலக கோப்பையை வென்றது. 
 
ஜூனியர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இந்தியாவின் தூண் என்று அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய டிராவிட் இன்று இந்தியாவை சர்வதேச அளவில் அசைக்க முடியாத அணியாக மாற்றியுள்ளார். 
 
இந்நிலையில் பிசிசிஐ தலைமை பயிற்சியாளர், அணி வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு பரிசு தொகை அறிவித்துள்ளது. ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம், அணி வீரர்களுக்கு தலா 30 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய அணி மற்றும் அதன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments