Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: டெல்லி, கடைசி நிமிடத்தில் த்ரில் வெற்றி பெற்ற பெங்களூரு

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (22:04 IST)
புரோ கபடி போட்டியில் இன்றைய போட்டி ஒன்றில் பெங்களூரு அணி கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்று அசத்தியது. பெங்களூரு மற்றும் பாட்னா அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் சம நிலையில் புள்ளிகளைப் பெற்று இருந்தன. இந்த நிலையில் கடைசி ரெய்டு சென்ற பெங்களூரு அணியின் பவன்குமார் இரண்டு புள்ளிகளை எடுத்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினார். இந்த போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 40 புள்ளிகளையும் பாட்னா அணி 39 புள்ளிகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
முன்னதாக ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணி 44 புள்ளிகளும், டெல்லி அணி 46 புள்ளிகளும் பெற்றதையடுத்து டெல்லி அணி இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி, அரியானா, பெங்கால் ஆகிய மூன்று அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. தொடர் வெற்றியை பெற்று வரும் பெங்களூரு 4வது இடத்திலும் ஜெய்ப்பூர் அணி ஐந்தாவது இடத்திலும் மும்பை அணிஆறாவது இடத்திலும் உள்ளன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தமிழ் தலைவாஸ் அணி பத்தாவது இடத்திலும் இன்று தோல்வியடைந்த பாட்னா அணி கடைசி இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments