Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: டெல்லி, கடைசி நிமிடத்தில் த்ரில் வெற்றி பெற்ற பெங்களூரு

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (22:04 IST)
புரோ கபடி போட்டியில் இன்றைய போட்டி ஒன்றில் பெங்களூரு அணி கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்று அசத்தியது. பெங்களூரு மற்றும் பாட்னா அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் சம நிலையில் புள்ளிகளைப் பெற்று இருந்தன. இந்த நிலையில் கடைசி ரெய்டு சென்ற பெங்களூரு அணியின் பவன்குமார் இரண்டு புள்ளிகளை எடுத்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினார். இந்த போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 40 புள்ளிகளையும் பாட்னா அணி 39 புள்ளிகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
முன்னதாக ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணி 44 புள்ளிகளும், டெல்லி அணி 46 புள்ளிகளும் பெற்றதையடுத்து டெல்லி அணி இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி, அரியானா, பெங்கால் ஆகிய மூன்று அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. தொடர் வெற்றியை பெற்று வரும் பெங்களூரு 4வது இடத்திலும் ஜெய்ப்பூர் அணி ஐந்தாவது இடத்திலும் மும்பை அணிஆறாவது இடத்திலும் உள்ளன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தமிழ் தலைவாஸ் அணி பத்தாவது இடத்திலும் இன்று தோல்வியடைந்த பாட்னா அணி கடைசி இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments