Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிரணியினருக்காக 70 ரன்களை வாரி வழங்கிய ஐதராபாத் அணி

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (07:42 IST)
நேற்றைய ஐதராபாத் - பெங்களூர் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில், 4 ஓவரில் 70 ரன்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்தார் ஐதராபாத் அணிவீரர் பசில் தம்பி.
ஐபிஎல் போட்டியின் 51வது போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று மோதின. இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து விலக வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் பெங்களூரு அணி விளையாடியது. 
 
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர் பசில் தம்பியின் ஓவரில் பெங்களூரு அணி வீரர்கள் 70 ரன்களை எடுத்து அசத்தினர். பசில் தம்பி எந்தெந்த ஓவரில் எவ்வளவு ரன்களை பெங்களூரு அணி வீரர்களுக்கு  வாரிக் கொடுத்தார் என்பதை பார்ப்போம்
 
பசிலின் 8 வது ஓவர்   -  19 ரன்கள் 
பசிலின் 12 வது ஓவர் -  18 ரன்கள்
பசிலின் 15 வது ஓவர் -  14 ரன்கள்
பசிலின் 19 வது ஓவர் -  19 ரன்கள்
என  பசில் தம்பியின் 4 ஓவரில் 70 ரன்களை குவித்தது பெங்களூரு அணி. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments