Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய தடகள வீராங்கனை: 4 ஆண்டுகள் விளையாட தடை..!

Mahendran
வியாழன், 22 பிப்ரவரி 2024 (18:51 IST)
ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய ஹரியானா மாநில வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அஞ்சலிதேவி என்பவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை காலத்தில் அவர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தோகா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் அஞ்சலிதேவி பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊக்க மருந்து பயன்படுத்தியதன் காரணமாக வீராங்கனை அஞ்சலிதேவிக்கு 4 ஆண்டுகள் தடை என்று அறிவிப்பு வீராங்கனைகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments