Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ச்சியாக அடிவாங்கும் ஆசிய அணிகள்: முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?

Webdunia
ஞாயிறு, 2 ஜூன் 2019 (08:20 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆசிய அணிகள் முழுமையாக 50 ஓவர்கள் விளையாட முடியாமல் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து திணறி வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 
இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதிய பாகிஸ்தான், நியூசிலாந்து அணியுடன் மோதிய இலங்கை, ஆஸ்திரேலியா அணியுடன் மோதிய ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முழுமையாக 50 ஓவர்கள் விளையாட முடியாமல் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தன. குறிப்பாக பாகிஸ்தான் அணி 105 ரன்களுக்கும், இலங்கை அணி 136 ரன்களுக்கும் ஆட்டமிழந்து படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டிகள் இரண்டு இன்னிங்ஸ் சேர்த்தும் 50 ஓவர்கள் கூட விளையாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஆசிய அணிகளின் படுதோல்வியை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியுடன் மோதவுள்ள இந்திய அணி வெற்றி பெற்று ஆசிய அணிகளின் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.
 
இந்த நிலையில் இதுவரை முடிவடைந்துள்ள போட்டிகளின்படி மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments