Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதுமா?

Siva
வெள்ளி, 26 ஜூலை 2024 (09:44 IST)
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெறும் நிலையில் இன்று அரையிறுதி போட்டிகள் தொடங்குகின்றன. இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத இருப்பதாகவும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் அரையிறுதி போட்டி மதியம் 2 மணிக்கும், இரண்டாவது அரையிறுதி   போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு அரை இறுதி போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்பாக இருக்கும் என்ற நிலையில் மீண்டும் ஒருமுறை அந்த போட்டி வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணியில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

அடுத்த கட்டுரையில்
Show comments