Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்ரான் கானின் சாதனையை சமன் செய்த அஸ்வின்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (11:04 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது அவரின் 8 ஆவது தொடர்நாயகன் விருதாகும்.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், நியூஸிலாந்தின் ரிச்சார்ட் ஹாட்லி, ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் ஆகியோர் 8 முறை தொடர்நாயகன் விருது பெற்றுள்ளனர். அவர்களின் சாதனையை இப்போது அஸ்வின் சமன் செய்துள்ளார்.

11 முறை தொடர்நாயகன் விருதுபெற்று முத்தையா முரளிதரன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 9 முறை விருதுபெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments