Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (17:45 IST)
ஐபிஎல் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து வருகிறது. நேற்று வரை 18 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா திடீரென ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக தெரிகிறது. இவர் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விரலில் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் சில நாட்களில் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
டெல்லி அணியின் முக்கிய இடது கை சுழற்பந்து வீச்சாளராக இருந்த அமித் மிஸ்ராவுக்கு பதில் வேறு எந்த வீரரும் தேர்வு செய்யப்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் 18 ஆண்டுகள் காத்திருந்தேன்… அனுஷ்கா சர்மா 11 ஆண்டுகள் காத்திருந்தார் –கோலி உருக்கம்!

எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி… RCB அணி குறித்து விஜய் மல்லையா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments