Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட்: மழையினால் இன்றைய போட்டியும் பாதிப்பு, அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (21:09 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணிகள் பெற்றுள்ள புள்ளிகளை விட வருணபகவான் பெற்றுள்ள புள்ளிகளே அதிகம் இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா போட்டி லண்டனிலும் இன்னொன்று ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி கார்டிஃப் நகரில் நடைபெற்று வருகிறது
 
இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பாக தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
ஆனால் நல்லவேளையாக மழை சிறிது நேரத்தில் நின்றுவிட்டதால் தற்போது 48 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சற்றுமுன் வரை ஆப்கானிஸ்தான் 21 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

டி20 போட்டியில் 19 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments