Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் மட்டையை சாப்பிடுவியா சச்சின்? நடிகை ரோகினி கேள்வி!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (11:20 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் விவசாயிகள் போராட்டம் குறித்து பகிர்ந்த டிவீட் அவர் மீதான விமர்சனங்களை அதிகமாக்கியுள்ளது.

டெல்லியில் விவசாயிகள் 80 நாளுக்கும் மேலான தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான இணையதளத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,டெல்லியில் நுழையமுடியாதபடி ஆணித்தடுப்பு தடுப்புச்சுவர்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக சில வெளிநாட்டு பிரபலங்கள் டிவீட் செய்ததை அடுத்து இந்திய வீரர் சச்சின் ‘இந்தியாவின் தேசிய இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டில் வசிப்போர் பார்வையாளர்களாக  மட்டும் இருங்கள் பங்கேற்பாளர்களாக வேண்டாம். இந்தியர்களுக்கு இந்தியாவைப் பற்றித் தெரியும். இந்தியா ஒற்றுமையால் கட்டமைக்கப்பட்டது’ எனத் தெரிவித்தார்.

இந்த டிவீட் இந்திய மக்களை கொந்தளிக்கவைத்துள்ளது. இதையடுத்து சச்சினுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரோகினி ‘கிரிக்கெட் மட்டைய சாப்பிடுவியா சச்சின்? அதுவும் ஒரு விவசாயி வளர்த்த மரத்திலிருந்துதான் வந்தது.’ எனக் கூறி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments