Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு வீரர்கள் கமிட்டி தலைவராக அபினவ் பிந்த்ரா தேர்வு

துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு வீரர்கள் கமிட்டி தலைவராக அபினவ் பிந்த்ரா தேர்வு
, வெள்ளி, 31 அக்டோபர் 2014 (14:21 IST)
சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்.,) வீரர்கள் கமிட்டி தலைவராக இந்திய விரர் அபினவ் பிந்த்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்ற நமது இந்திய விரர் அபினவ் பிந்த்ரா, துப்பாக்கி சுடுதல் வீரர்களின் கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமை அபினவ் பிந்த்ராவிற்கு கிடைத்துதுள்ளது.
 
இதுகுறித்து அபினவ் பிந்த்ரா கூறுகையில், கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்டது எனக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என கூறியுள்ளார். 
 
2008 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் அபினவ் பிந்த்ரா. இவர் ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்றவர்களில் முதலாம் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil