சர்வதேச கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்: என்ன காரணம்? பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (17:49 IST)
ஸ்காட்லாந்தை சேந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் கொன் டி லாங் மூளைக்கட்டியால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஸ்காட்லாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான கொன் டி லாங் 1981ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு ஆல் ரவுண்டர். வலது பக்க பேட்ஸ்மேனான இவர்  2015-ம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் அவர் அறிமுகமானார். பல போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இவர் 2015ல் ஆப்கானிஸ்ஹானுக்கு எதிரான சர்வதேச போட்டியில் சிறப்பாக விளையாடினார்.
 
கடந்த  2018-ம் ஆண்டு, மூளைக்கட்டி நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. சிகிச்சை பெற்று வந்த கொன் டி லாங் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவரது மறைவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments