Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதும் - ஜாவித் மியாண்டட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதும் - ஜாவித் மியாண்டட்
, ஞாயிறு, 23 மார்ச் 2014 (17:12 IST)
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் தெரிவித்துள்ளார்.
FILE

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஜாவித் மியாண்டட், பாகிஸ்தான் அணி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடியது குறித்து தெரிவிக்கையில்,

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றது. அணியின் மோசமான பேட்டிங் தான் இந்த தோல்விக்கு காரணம். எங்களது பேட்ஸ்மேன்களால் இந்தியாவின் சுழற்பந்தை கையாள முடியவில்லை.

இதனால் பாகிஸ்தான் அணி வாய்ப்பு முடிந்து விடவில்லை. பாகிஸ்தானும், இந்தியாவும் இறுதிப்போட்டியில் மோதும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
webdunia
FILE

பாகிஸ்தான், இந்தியா, வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரை இறுதியில் நுழையும். இதில் இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது என பேசியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil