ராஜஸ்தானுக்கு 170 ரன்கள் இலக்கு கொடுத்த கொல்கத்தா

Webdunia
புதன், 23 மே 2018 (20:56 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முக்கிய போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வரும் இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் நிலையில் உள்ளது.
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்து கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 169 ரன்கள் எடுத்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 52 ரன்களும், ரஸல் 49 ரன்களும் எடுத்தனர்.
 
ராஜஸ்தான் அணியின் கவுதம், ஆர்ச்சர், லாஹ்லின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கோபால் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த நிலையில் அடுத்து சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இன்னும் சிறிது நேரத்தில் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.70 is the target to Rajasthan

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments