Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஓவரில் 4 விக்கெட்டுக்கள்: பஞ்சாப் அணியை 151 ரன்களில் சுருட்டிய ஐதராபாத்!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (17:43 IST)
ஒரே ஓவரில் 4 விக்கெட்டுக்கள்: பஞ்சாப் அணியை 151 ரன்களில் சுருட்டிய ஐதராபாத்!
ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் கடைசி ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தப்பட்டது. இதனை அடுத்து பஞ்சாப் அணி 151 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் லிவிங்ஸ்டன் அபாரமாக விளையாடி 60 ரன்கள் அடித்த போதிலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பாக இம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் 4 விக்கெட்டுக்கு வீழ்த்தப்பட்டன  என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் 152 என்ற எளிய இலக்கை நோக்கி தற்போது ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக நான்கு வெற்றி பெற்ற அணி என்ற பெருமை மட்டுமின்றி புள்ளி பட்டியலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments