Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஓவரில் 4 விக்கெட்டுக்கள்: பஞ்சாப் அணியை 151 ரன்களில் சுருட்டிய ஐதராபாத்!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (17:43 IST)
ஒரே ஓவரில் 4 விக்கெட்டுக்கள்: பஞ்சாப் அணியை 151 ரன்களில் சுருட்டிய ஐதராபாத்!
ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் கடைசி ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தப்பட்டது. இதனை அடுத்து பஞ்சாப் அணி 151 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் லிவிங்ஸ்டன் அபாரமாக விளையாடி 60 ரன்கள் அடித்த போதிலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பாக இம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் 4 விக்கெட்டுக்கு வீழ்த்தப்பட்டன  என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் 152 என்ற எளிய இலக்கை நோக்கி தற்போது ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக நான்கு வெற்றி பெற்ற அணி என்ற பெருமை மட்டுமின்றி புள்ளி பட்டியலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments