Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஸ்க் எடுத்து டிக்ளேர் செய்த இந்திய அணி.. நாளை முடிவு தெரியுமா?

Mahendran
திங்கள், 30 செப்டம்பர் 2024 (17:53 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்திய அணி ரிஸ்க் எடுத்து டிக்ளர் செய்துள்ளது. நாளை இறுதி நாளில் முடிவு தெரியுமா என்பது காத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தின் பாதியில் மழை குறுக்கிட்டது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில், இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில், வங்கதேச அணி 233 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸ் முடித்தது.

அதைத்தொடர்ந்து, இந்தியா அதிரடியாக விளையாடி 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது டிக்ளேர் செய்தது. இதற்குப் பின்பு, வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

நாளை ஒரே ஒரு நாள் மட்டும் மீதம் இருக்கும் நிலையில், வங்கதேச அணியை குறைந்த ஸ்கோரில் வீழ்த்தி, தேவையான ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெறுமா என்பது காத்திருந்து பார்க்க வேண்டும்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தடை… 200 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments