Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் கூடைப்பந்து: இந்திய அணி தோல்வி

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (10:42 IST)
சென்னை: ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் கொரியாவிடம் தோல்வி அடைந்தது.

காலையில் நடந்த `லெவல்2' பிரிவு ஆட்டம் ஒன்றில் பிலிப்பைன்ஸ் அணி 61- 55 என்ற புள்ளி கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் லெபனான் அணி 83- 68 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது. இன்னொரு ஆட்டத்தில் கஜகஸ்தான் அணி 94- 40 என்ற புள்ளி கணக்கில் இலங்கையை வென்றது.

மாலையில் `லெவல்1' பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் கொரியாவை எதிர்கொண்டது. உலக தர வரிசையில் 41-வது இடத்திலும், ஆசியாவில் 7-வது இடத்திலும் உள்ள இந்திய அணி, உலக தர வரிசையில் 9-வது இடமும், ஆசியாவில் முதலிடமும் வகிக்கும் கொரியாவின் சிறப்பான ஆட்டத்துக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்கம் முதலே திணறியது. முடிவில் கொரியா அணி 102-46 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை எளிதில் தோற்கடித்தது.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments