Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளிர் கூடைப்பந்து: இந்திய அணி தோல்வி

மகளிர் கூடைப்பந்து: இந்திய அணி தோல்வி
, வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (10:42 IST)
சென்னை: ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் கொரியாவிடம் தோல்வி அடைந்தது.

காலையில் நடந்த `லெவல்2' பிரிவு ஆட்டம் ஒன்றில் பிலிப்பைன்ஸ் அணி 61- 55 என்ற புள்ளி கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் லெபனான் அணி 83- 68 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது. இன்னொரு ஆட்டத்தில் கஜகஸ்தான் அணி 94- 40 என்ற புள்ளி கணக்கில் இலங்கையை வென்றது.

மாலையில் `லெவல்1' பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் கொரியாவை எதிர்கொண்டது. உலக தர வரிசையில் 41-வது இடத்திலும், ஆசியாவில் 7-வது இடத்திலும் உள்ள இந்திய அணி, உலக தர வரிசையில் 9-வது இடமும், ஆசியாவில் முதலிடமும் வகிக்கும் கொரியாவின் சிறப்பான ஆட்டத்துக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்கம் முதலே திணறியது. முடிவில் கொரியா அணி 102-46 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை எளிதில் தோற்கடித்தது.


Share this Story:

Follow Webdunia tamil