Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவுலர்களைக் காலி செய்யவே அப்படி ஆடினேன் - மேக்ஸ்வெல்

Webdunia
சனி, 19 ஏப்ரல் 2014 (12:38 IST)
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த மிகப்பெரிய இலக்கான 206 ரன்களை ஊதித் தள்ளிய பஞ்சாப் அணியில் முக்கிய ஸ்டார் கிளென் மேக்ஸ்வெல். இவரை கட்டுப்படுத்த முடியாமல் சென்னை கேப்டன் தோனி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
இந்நிலையில், விக்கெட்டை விட்டு ஒதுங்கியும், நகர்ந்தும், ரிவர்ஸ் ஸ்வீப் செய்தும் பல புதுமாதிரியான ஷாட்களை ஆடியது பவுலர்களின் ரிதமைக் காலி செய்யவே என்று கூறியுள்ளார் கிளென் மேக்ஸ்வெல்.
 
நேற்று அவர் 43 பந்துகளில் 95 ரன்களை விளாசினார். "நான் பவுலர்களை கடுமையாக ஏமாற்றமடையச் செய்யவே அப்படி ஆடினேன். சென்னை அணிக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட இலக்கை துரத்தியது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் மேக்ஸ்வெல்.
 
கேப்டன் தோனி கூறுகையில், நாம் 200 அடிக்க முடியும்போது எதிராளியும் அடிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும், பந்து வீச்சு இன்னும் மேம்படவேண்டும், ஒவ்வொரு பேட்ஸ்மெனுக்கும் ஒவ்வொரு உத்தியை பவுலர்கள் வகுத்துக் கொள்ளவேண்டும். ஸ்பின் எடுகாததால் பவுலர்களுக்கு கடினமாக இருந்தது.
 
என்றார் தோனி.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments