இந்தத் தோல்விக்கு நடுவரின் முடிவுதான் காரணம் என்று பிராட் கூறியிருந்தார். அதாவது 5.2 ஓவர்கள் வரை ஆட்டத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் வானில் இடி இடிக்கத் தொடங்கியபோதே அதாவது 5வது ஓவரின் ஆரம்பத்திலேயே ஆட்டத்தை நிறுத்தியிருக்கவேண்டும் என்றும் 5.2 ஓவர்கள் வரை ஆட்டத்தை நீட்டித்து பிறகு நிறுத்தியது தவறு என்று நடுவர்கள் அலீம் தார் மற்றும் பால் ரெய்ஃபல் ஆகியோரை கடுமையாக சாடியிருந்தார்.