பாக்குவில் நடைபெறும் உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஜெய் பகவான்(60கிலோ), தேவேந்திரோ சிங் (49கிலோ) ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 56 கிலோ உடல் எடைப்பிரிவில் அகில் குமார் தோல்வி தழுவி வெளியேறினார். மன்ப்ரீத் சிங்கும் தோல்வி தழுவினார்.
மெக்சிகோ வீரர் வெலாஸ்குவேஸ் என்பவரை தேவேந்திரோ 40- 19 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
செக்.குடியரசு வீரர் மிராஸ்லாவ் செர்பனை 14- 6 என்று வீழ்த்தினார்.
இவர்கள் மனோஜ்குமார்(64கிலோஅ), தினேஷ் குமார் (81), மற்றும் விகாஸ் கிஷன் ஆகியோருடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.