ஜெர்மனியில் நடைபெற்ற உலகத் துப்பாக்கி சுடுதல் போட்டித் தொடரில் முதன் முதலாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவந்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவரது இந்தச் சாதனை நாட்டிற்கு பெருமையைச் சேர்த்திருப்பதுடன் இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கத்தினை அளித்துள்ளது, என்று பிரதமர் தன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
50 மீ ரைபிள் போட்டியில் தேஜஸ்வினி சாதனையைச் சமன் செய்யும் 597 புள்ளிகளை எட்டினார்.
1998 ஆம் ஆண்டு ரஷ்ய வீராங்கனை மரினா பாப்கோவா செய்த சாதனையையே தற்போது இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சமன் செய்துள்ளார்.