வங்கதேசத்தில் நடக்கும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் ஹாக்கி பிரிவில், இந்தியா 21-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.
மவுலானா பாஷானி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், இந்தியா இடைவேளையின்போது 10-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
2வது பாதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள் மேலும் 11 கோல் அடித்து அசத்தினர். நேபாள வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் இந்தியா 21-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.
இந்திய கேப்டன் அஜிதேஸ் ராய் 5 கோலும், யுவராஜ் வால்மிகி, முகமது ஆமீர்கான் தலா 3 கோலும் அடித்தனர். ஆட்டநாயகன் விருதை இந்திய வீரர் ரோஷன் பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம் 3-1 என்ற கோல் கணக்கில் இலங்கையை தோற்கடித்தது.