Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாய் சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்-பெர்டிச்

Webdunia
சனி, 1 மார்ச் 2014 (17:59 IST)
டியூட்டி பிரீ சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதன் இரட்டையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- பாகிஸ்தானின் குரேஷி ஜோடி, மகேஷ் பூபதி (இந்தியா)- டெனிஸ் இஸ்டோமின் (உஸ்பெகிஸ்தான்) கூட்டணியை சந்தித்தது.
FILE

1 மணி 30 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் போபண்ணா ஜோடி 5-7, 7-6 (3), 10-7 என்ற செட் கணக்கில் பூபதி இணையை வெளியேற்றி அரையிறுதியை எட்டியது.

ஒற்றையர் அரைஇறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் ஜோகோவிச்சுடன் நேற்றிரவு மோதினார். 1 மணி 45 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரர் 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு அரைஇறுதியில் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச் 7-5, 7-5 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் கோல்ஸ்ரீபரை சாய்த்தார். இறுதி ஆட்டத்தில் பெடரர்-பெர்டிச் எதிர்த்து ஆட உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments