அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா - யு.எஸ்.ன் பெத்தானி மெட்டாக் இணை முன்னேறியுள்ளது!
இன்று நடந்த காலிறுதியில் அமெரிக்காவின் எலீயா வோஸ்டர்லோ - ரஷ்யாவின் அனஸ்டாசியா ரோடியனோவா இணையை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் சானியா - பெத்தானி இணை வென்றது.
இன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் பெலாரசின் வோல்கா கோவாட்சோவாவை சானியா எதிர்கொள்கிறார். (யு.என்.ஐ.)