இன்னும் 100 முறை நடந்தாலும் சிங்கிள் ஓடமாட்டேன்… சஞ்சு சாம்சன் உறுதி!

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (08:48 IST)
பஞ்சாப் அணிக்கு எதிராக இறுதி ஓவரில் சஞ்சு சாம்சன் சிங்கிள் ஓட மறுத்தது இப்போது பேசுபொருளாகியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அண்யின் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 221 ரன்களை சேஸ் செயதது. அந்த போட்டியில் அசுர பார்மில் இருந்த சஞ்சு சாம்சன் கடைசி ஓவரின் ஐந்தாவது பாலில் எதிர்முனையில் மோரிஸ் இருக்க சிங்கிள் ஓடுவதைத் தவிர்த்தார். அதற்கடுத்த பாலில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பவுண்டரி எல்லைக்கு அருகே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதனால் போட்டி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் இரண்டாவது போட்டியில் மோரிஸ் 4 சிக்ஸர்களை விளாசி வெற்றி பெறவைத்தார். அதன் பின்னர் சஞ்சு சாம்சனிடம் மோரிஸின் அதிரடிக்குப் பிறகு உங்கள் முடிவை மாற்றுவீர்களா எனக் கேட்டபோது ‘இன்னும் 100 முறை அந்த போட்டி நடந்தாலும், ஐந்தாவது பந்தில் நான் சிங்கிள் ஓடியிருக்க மாட்டேன்.’ எனக் கூறியுள்ளார். அதே போல மோரிஸும் ‘அன்றைய போட்டியில் சஞ்சு என்னைவிட அதிக பார்மில் இருந்தார். அதனால் அவர் செய்தது சரியான முடிவுதான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து.. ரசிகர்களுக்கு டிக்கெட் ரீபண்ட் கிடையாதா?

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது போட்டி ரத்து.. 5வது போட்டியில் இருந்து சுப்மன் கில் விலகல்..!

மினி ஏலத்தில் சிஎஸ்கே மிஸ் செய்த 5 பிரபல வீரர்கள்.. சோகத்துடன் ஒரு பதிவு..

சிஎஸ்கே அணிக்கு நஷ்டத்தை உண்டாக்கினாரா அஸ்வின்.. வழக்கம் போல் நகைச்சுவையுடன் பதிலடி..!

நேற்று 25 கோடி ரூபாய் சம்பாதித்த ஹீரோ.. இன்று ஜீரோ.. கேமரூன் க்ரீன் பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments