உலக்கோப்பை கபடி- பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
, ஞாயிறு, 16 டிசம்பர் 2012 (10:36 IST)
உலகக்கோப்பை கபடிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தட்டிச் சென்றுள்ளது.3
வது உலக்கோப்பை கபடி போட்டித் தொடர் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வந்தன.லூதியானாவில் நேற்றிரவு நடைபெற்ற ஆடவருக்கான இறுதியாட்டத்தில் கபடியில் பலம் வாய்ந்த இந்தியாவும், பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின.சொந்த மண்ணில், ரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் களமிறங்கிய இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 34 - 9 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.2
வது பாதியிலும் இந்திய அணியின் கையே ஓங்கியிருந்தது. முடிவில் 59 - 22 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது. இதன் மூலம் 3வது முறையாக தொடர்ந்து உலகக் கோப்பை பட்டத்தை வென்று சாதனை படைத்து உள்ளது இந்திய கபடி அணி.வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2 கோடி ரூபாய் பணமும், சுழற்கோப்பையும் பரிசாக அளிக்கப்பட்டது. இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணிக்கு, ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.