Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீனிவாசன் மருமகன் நட்பால் ஜாக்பாட் அடித்த விண்டூ தாரா சிங்!

Webdunia
வெள்ளி, 24 மே 2013 (10:11 IST)
FILE
ஐபிஎல் சாக்கடை நோண்டப்பட்டு வருகையில் பல்வேறு துர்நாற்றங்கள் அதிலிருந்து கிளம்பி வருகின்றன. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாளி ஸ்ரீனிவாசனின் மருமகனான சி.இ.ஓ. குருநாத் மெய்யப்பனுடன் ஏற்பட்ட சகவாசத்திற்குப் பிறகே விண்டூ தாரா சிங் சிறந்த சூதாட்டக்காரராகவும், அதன் பிறகு நல்ல பணமும் பண்ணியதாக ஆங்கில நாளேட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியையும் ஐபிஎல் மீதான அருவருப்பையும் அதிகரிப்பதாக்வே உள்ளது.

' இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தன் குர்நாத் மெய்யப்பனுடன் விண்டூ தாரா சிங் நண்பரானார். ஆனால் இதற்கு முன்பு சூதாட்டத்தில் சொதப்பிய விண்டூ இந்த நட்பிற்குப் பிறகு இந்த ஐபிஎல்.கிரிக்கெட் தொடர் மூலம் ரூ.17 லட்சம் சம்பாதித்துள்ளார்' என்கிறார் அந்த அதிகாரி.

சூதாட்ட சர்க்கிளில் 'ஜாக்' என்று செல்லமாக அழைக்கப்படும் விண்டூ இதற்கு முன்னர் 5 ஐபிஎல் போட்டித் தொடர்களிலும் பெட்டிங்கில் ஈடுபட்டு கடும் நஷ்டமடைந்துள்ளார். ஆனால் இப்போதைய வெற்றிக்கு மெய்யப்பன் எந்த விதத்தில் உறுதுணையாக இருந்தார் என்பது உறுதியாக கூறமுடியாவிட்டாலும் விண்டூவின் திடீர் சக்சஸ் எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆஜராக கால அவகாசம் வேண்டுமாம்!

இதற்கிடையே எங்கிருக்கிறார் என்று தெரியாத ஸ்ரீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் தான் திங்களன்றுதான் விசாரணைக்கு ஆஜ்ராவேன் என்று கூறியுள்ளார். ஏன்? மடியில் கனமில்லாவிட்டால் உடனடியாக ஆஜராகவேண்டியதுட்பானே?

இந்த எழ்வெடுத்த அசிங்கம் பிடித்த ஐபிஎல். இறுதிப் போட்டி வரும் ஞாய ிறன்று நடைபெறுகிறதாம் அதற்கு மறுநாள் இவர் அட்டென்ட் செய்கிறாராம்!

ராஃப் தவறு செய்தால் நீக்கம், ஸ்ரீசாந்த், சாண்டிலாஅ கைது! அதேபோல் ஊழல் புகார் வந்தால் ஸ்ரீனிவாசன் ராஜினாமா செய்யவேண்டும், பிசிசிஐ போஸ்ட், ஐசிசி போஸ்ட், என்று ரகம் ரகமாக பதவி வகித்து வரும் ஸ்ரீனிவாசன் கூறுகிறார் மீடியா இதனை இவ்வாறு கொண்டு செல்வது நியாயமற்றது என்று கூறுகிறார்! எது நியாயம், எது அநியாயம் என்பதெல்லாம் யார் யார் வாயில் இருந்து வருகிறது என்பதுதான் இந்த நாட்டின் மிகப்பெரிய கொடுமை!

ஒரேநாளில் 35 முறை விண்டூ தாரா சிங் மெய்யப்பனுடன் தொடர்பு கொண்டதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

நாம் கேட்பதெல்லாம் இன்னும் ஏன் இந்த அரையிறுதி, பிளே ஆஃப், இறுதிப் போட்டி எல்லாம்?

இறுதிப் போட்டியிலும் ரூ.1500 கோடி முதல் 2000 கோடி வரை சூதாட்டம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஹெட்லைன்ஸ் டுடே செய்திகள் தெரிவிக்கின்றன.

அது முடிந்தவுடன் இன்னும் என்னென்ன குண்டுகள் போடப்படவுள்ளதோ?

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments