சேவாகின் கூற்றும், எதிர்வினைகளின் அபத்தங்களும்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2010 (17:37 IST)
webdunia photo
FILE
வங்கதேசத்திற்கு எதிராக சிட்டகாங்கில் நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ‘கிரிக்கெட் அல்லாத காரணங்களால ் ’ திடீர் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளத ு. காரணம் இந்திய அணித் தலைவர் விரேந்திர சேவாக ், வங்கதேச அணிய ை " சாதாரண அண ி" என்று வர்ணித்து விட்டார ். ஆனால் இந்திய ா 243 ரன்களுக்கு சுருண்டத ு.

முதலில் சேவாக் கூறியது வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட ் வரலாற்றை வைத்து கூறப்பட்ட ஒரு கூற்ற ு, அந்த அணியின் திறமை குறித்த மதிப்பீடு அல்ல என்ற சிறிய அளவிலான சுவாதீனம் கூட நம் முசுட்டுப் பத்திரிக்கையாளர்களிடம் இருப்பதில்ல ை.

உடனே அன்றைய தின செய்தியாளர்கள் கூட்டத்தில் சேவாகின் கூற்றை வைத்தே செய்தியாளர்கள் வருவோர் போவரிடத்திலெல்லாம ் கேள்வி மழை பொழிந்தனர ்.

கிரிக்கெட்டிற்கான் பிரத்யேக முதல் தர இணையதளம ் "Shakib and Shahadat dominate 'ordinary' Indi a என்று ஆர்டினரி என்ற வார்த்தையை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தி செய்தி வெளியிட்டத ு.

செய்தியாளர்கள் கூட்டத்தில் சச்சின் டெண்டுல்கரிடம ், சேவாக் கூற்று குறித்து கேட்டபோது அவர் கடுகடுப்பாக ி, அதையெல்லாம் சேவாகிடம் கேளுங்கள் என்று கடுப்படித்துள்ளார ்.

மேலும் கோபமுற்று இந்த டெஸ்ட் போட்டி இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதையும் அதே கடுப்புடன் கூறினார ்.

ஆஸ்ட்ரேலிய இணையதளச் செய்தி ஒன்றில் சேவாக் வங்கதேசத்தை ஆர்டினரி என்று கூறிய பிறகு இந்தியாவின் பேட்டிங் கர்வத்தை வங்கதேசம் உடைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளத ு.

சேவாக் கூறியது ஒன்று என்றால ், அதனால் இந்தியா பேட்டிங் சரிவடைந்தது என்று கூறுவது மீண்டும் வங்கதேசத்தின் திறனை ஒப்புக் கொள்ளாததற்கு சமம ே.

சேவாக் கூறியது போல் நேற்று இந்தியா விக்கெட்டுகளை இழக்காமல ் 500 ரன்களைக் குவித்திருந்தால ்... சேவாக் கூறியது சரியானது என்று இந்தப் பத்திரிக்கையாளர்கள் கூறுவார்கள ா? அல்லது ஷாகிப் அல் ஹசன் இந்தியா பற்றி கூறியபோது சரியான இடங்களில் பந்து வீசினால் அவர்கள் தவறு செய்வார்கள் என்று கூறியது பொய்த்துப் போய்விட்டது, ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட்டை முதலில் கற்கவேண்டும் என்று கூறமாட்டார்கள ா?

பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் அறுவையாகி வருவதால் அதனை உயிரூட்ட இதுபோன்ற கூற்றுகளைக் கூறுவது என்பது எல்லா அணிகளுக்குமான வழக்கமாக உள்ளத ு. இது ஒரு மார்க்கெட்டிங் உத்த ி. சேவாக் கூறியது அந்த வகையைச் சார்ந்ததே என்பது கிரிக்கெட்டை விவரமாகப் பார்ப்போருக்கு விளங்கியிருக்கும்.

FILE
சச்சின் டெண்டுல்கரும் இதற்கு கடுப்பாக வேண்டிய தேவையில்ல ை. ஜாலியாக இதனை எதிர்கொண்ட ு, சேவாக் தனது மட்டையை சுழற்றுவார் இந்த முறை நாக்கை சுழற்றியுள்ளார ். இதில் ஒன்றும் பெரிதாக இல்லை என்று கூறியிருக்கலாம ். ஆனால் அவர் கடுப்பானதுதான் இப்போது சேவா‌க்கின் கூற்றிற்கு பெரிய விளம்பரம் ஆகிவிட்டத ு.

சரி விட்டுவிடுவோம ். வங்கதேச அணியை கிரிக்கெட் அணிகள் மட்டுமல்லாத ு, இன்று வரிந்து கட்டிக் கொண்டு சேவா‌க்கை குறைகூறும் பத்திரிக்கைகள் இதற்கு முன்னர் எவ்வளவு கேவலமாக எழுதியுள்ளன என்பதை அந்தப் பத்திரிக்கைகள் மறக்கலாம ். ஆனால் ஒரு நடுநிலை பார்வையாளராக நாம் மறக்க முடியாத ு. ஏனெனில் பத்திரிக்கைகள் தினசரி நடந்து கொண்டிருப்பதே மறதியின் அடிப்படையில்தான ே?

சேவாக் இதற்கு முன்னர ் 2004 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியா சென்ற போது இதே போன்ற ஒன்றைத்தான் கூறினார ். அதாவது அவர் நல்ல துவக்கங்களைக் கொடுத்தார ். ஆனால் சதம் எடுக்கவில்ல ை. அப்போது அவரிடம் கேட்டபோத ு, ' ஆம ், நான் ஒன்றிரண்டு சதங்களை இந்நேரம் அடித்திருக்கவேண்டும ், நிச்சயம் அடுத்த டெஸ்ட்டில் சதத்தை எடுப்பேன் என்றார ். அடுத்த டெஸ்ட் போட்டிதான் அந்த மெல்போர்ன் டெஸ்ட ். ஆஸ ி. பந்து வீச்சாள‌ர்களுக்கு படையல் நடத்தி தேநீர் இடைவேளையின் போத ு 195 ரன்களைக் குவித்தார ்.

அப்போது ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்களுக்கு தன்மானமே இல்லை என்று யாராவது கூறினார்கள ா அல்லது எழுதினார்கள ா? நாம் எது தன்னம்பிக்க ை, எது இழிவுபடுத்துவது என்ற இரண்டிற்குமான வேறுபாடுகள் குறித்த ஒரு நிலையற் ற, அசட்டுத்தனமான முன் அனுமானங்களைக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்ம ை. சேவாக் அப்போது கூற ி, செய்து காட்டியது தன்னம்பிக்க ை, இப்போது கூறுவது அகராதித் தனம ா?

ஏதோ சேவாக் அது போன்று கூறியதால்தான் வங்கதேச அணி நேற்று அவ்வளவு சிறப்பாக வீசியது என்று கூறினால் மறுபடியும் வங்கதேச அணிக்கு இயல்பிலேயே திறமை இல்லை என்று கூறுவது போல் அல்லவா ஆகிறத ு. இது சேவா‌க்கின் கூற்றைவிட மிக மோசமானதாகி விடாத ா?

FILE
ஒரு முறை ஆலன் டோனல்ட் பற்றி நம் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியது இந்த இடத்தில் எடுத்துரைப்பது சாலப்பொருந்தும ். ஆலன் டோனல்ட ், பந்தின் தையலை பேட்ஸ்மெனுக்கு காண்பித்துக் கொண்டு நேரே நேரே வந்து மோதுவார் என்றார ். இது ஒரு துவக்க வீரரின் தன்னம்பிக்க ை. உடனே ஸ்ரீகாந்த் அவரிடம் ஆட்டமிழந்தால் திமிராக பேசி ஆட்டமிழந்தார் என்று கூறமுடியும ா?

இவை எல்லாவற்றிற்கும் மேலா க, சமீபத்தில ், உண்மையில் திமிருக்குப் பெயரெடுத்த ஆஸ்ட்ரேலிய அணி அங்கு பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அணி பற்றி பேசியதும ், அந்தப் பத்திரிக்கைகள் எழுதியதும் நாராசமானவ ை. இதை எந்த பத்திரிக்கையாளர்களாவது பாண்டிங்கிடமோ அல்லது ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்களிடமோ கேட்டனர ா? கடைசியில் மதிப்பிற்குரிய வர்ணனையாளர் டோனி கோசியர் ஒரு கட்டுரை எழுதி, 80களில் ஆஸ்ட்ரேலிய அணி இருந்த நிலைமையை எடுத்துரைத்து ஒரு வாங்கு வாங்கவும்தான் அந்தப் பத்திரிக்கைகள் பொத்திக்கொண்டு அடங்கி ன.

ஜேமி பண்டாரம ், மால்கம் கான் போன்ற பத்திரிக்கையாளர்கள் ஆஸ்ட்ரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அணிகளை நாகரிகமில்லாத முறையில் வசை பாடி எழுதுவதைத்தான் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர ். அந்த அணியின் கேப்டனும ், வீரர்களும் அந்த மனோநிலை உள்ளவர்கள்தான ். ஏன் நம் நம்பர் ஒன் கிரிக்கெட் இணையதளம் இதையெல்லாம் எதிர்த்து எழுதுவதில்ல ை?

2005 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கு முன் கிளென் மெக்ர ா 5-0 என்று இங்கிலாந்தை வெல்வோம் என்று கூறி மண்ணைக் கவ்வினர ். அப்போதாவது மெக்ரா அணியில் இருந்தார ்.

ஆனால் சமீபத்திய ஆஷஸ் தொடருக்கு முன் இதே கிளென் மெக்ரா மீண்டும் தன் அணியின் பலவீனங்கள் தெரியாமல ் 5-0 என்று ஆஸ்ட்ரேலியா வெல்லும் என்றார ். மீண்டும் மண்ணைக் கவ்வினர ். இப்போது யாராவது கிளென் மெக்ராவிடம ோ அல்லது பாண்டிங்கிடமோ சென்று இவ்வாறு கூறலாமா என்று கேட்டார்கள ா?

அதாவது காலனியாதிக்கம் விதைத்த அடிமை மனோநிலை இன்னமும் நம் பத்திரிக்கைகளிடைய ே, குறிப்பாக விளையாட்டு பற்றி எழுதும் பத்திரிக்கையாளர்களிடையே உள்ளத ு.

ஒரு விஷயத்தை ஆஸ்ட்ரேலிய ா, இங்கிலாந்து செய்தால் அது அவர்களத ு Tough Mentality- யைக் காண்பிக்கிறத ு. அதையே இங்குள்ளவர்க்ள் செய்தால் அது திமிராகி விடுகிறது!

FILE
சமீபத்திய மேற்கிந்திய தீவுகள் விவகாரத்திலும் இதுவே நடந்தத ு. ஒரு பத்திரிகையாளர்கள் கூட பாண்டிங்கிடம ோ, ஸ்டீவ் வாஹிடமோ இதுபோன்று உங்கள் பத்திரிக்கைகள் எழுதுகின்றனரே நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்றோ அல்லது பத்திரிக்கைகள் அவர்கள் எதிரணி பற்றி கூறும் கூற்றுகளை வைத்து அப்படி கூறலாமா என்றோ கேட்டதில்ல ை. ஆனால் சேவாக் கூறியதுதான் பெரிய பிரச்சனையாகிவிடுகிறத ு.

காரணம் இந்திய அணி நம்பர ் 1 இடத்தை பிடித்ததுதான ். இதுவும் தற்காலிகமானதுதான். இதனை தோனி உள்ளிட்டவர்கள் உணர்ந்துதான் வைத்திருக்கிறார்கள ்.

ஒரு முறை மேற்கிந்திய அணி இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டத ு. லாய்ட ், கிரீனிட்ஜ ், ரிச்சர்ட்ஸ ், ஹோல்டிங ், ராபர்ட்ஸ ், ஹோல்டர் என்ற பலமான அணியுடன் சென்றது மேற்கிந்திய அணி. அப்போது ஒரு நேர் காணலில் இங்கிலாந்து கேப்டன் டோனி கிரேக ் "we will make them grovel" என்றார ். அதாவது அவர்களை அடிமையாக்குவோம் என்று இதற்குப் பொருள ். இதனை நிறவெறி என்று யாரும் அப்போது கூறவில்ல ை. ஏனெனில் இங்கிலாந்து கிரிக்கெட்டை சவாலாக விளையாடுகிறது, அதனால் இதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவர ்.

இங்கிலாந்துடன் முன்பெல்லாம் இந்தியா விளையாடும்போதெல்லாம ். இங்கிலாந்த ு 250 ரன்கள் எடுத்து சுருண்டிருக்கும ். ஆனால் இந்திய ா 51 நோ லாஸ் எனும்போது கூட இங்கிலாந்து வானொலி வர்ணனையாளர்கள் இந்தியா ஃபாலோ ஆனைத் தவிர்த்தது என்று கூறுவர ். யாராவது இதையெல்லாம் கேட்டார்கள ா?

ஒரு முறை இயன் சாப்பல் இங்கிலாந்து அணி பற்றிக் கூறியதை இங்கு குறிப்பிடுவது அவசியம ், அந்த அணி தங்களது ஆட்டத்தை மேம்படுத்தவில்லையெனில் ஆஷஸ் தொடரில ் 2 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே விளையாட வேண்டும ், அந்த அணிக்கு இதுதான் தகுதி என்றார ்.

அப்போது யாராவது இயன் சாப்பலிடம் சென்று 'இவ்வளவு திமிராக பேசுகிறீர்கள ே' என்று கேட்டார்கள ா? இதையெல்லாம் திமிர் என்றோ அல்லது எதிரா க தன்னடக்கம் என்றோ நாம் பொதுப்புத்திக் கூறுகளுடன் அணுக முடியாத ு.

இது போன்ற உதாரணங்கள் ஏராளமானதை நாம் கூற முடியும ்.

வங்கதேசத்தை மற்ற அணிகளும ், வாரியங்களும ், பத்திரிக்கைகளும ், முன்னாள் வீரர்களும ், கிரிக்கெட் பண்டிதர்களும் மட்டம் தட்டியதை விட சேவாக் கூறியது ஒன்றும் பெரிய விஷயமில்ல ை.

FILE
சமீபத்தில் ஷேன் வார்ன் உள்ளிட்ட பெருந்தலைகள் மேற்கிந்திய அண ி, ஜிம்பாவ ே, வங்கதேசம் போன்ற அணிகளை தனியே பிரித்த ு 2 அடுக்கு டெஸ்ட் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று எழுதினார ். கிம் ஹியூஸ் மேற்கிந்திய அணியை தடை செய்ய வேண்டும் என்று எழுதினார ். அப்போதெல்லாம் நமது நம்பர் ஒன் கிரிக்கெட் இணையதளம் ஆஹ ா! அவர்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும ்! என்று வாளாயிருந்த ன.

ஜக்மோகன் டால்மியா வங்கதேசத்திற்கு டெஸ்ட் அந்தஸ்தை வாங்கிக் கொடுத்தாலும் கொடுத்தார ், அவரையும் வங்கதேச அணியையும் இன்று வரை யாரும் விட்டு வைக்கவில்ல ை. ஆனால் இன்று சேவாக் கூறியதும் புதிய கரிசனம் இந்த அணி மீது பத்திரிக்கைகளுக்கு பொத்துக் கொண்டு ஊற்றுகிறத ு.

வங்கதேச அணியை டெஸ்ட் போட்டியிலிருந்து விலக்குவதற்கான அனைத்து லாபியும் இன்று வரை மேலை அணிகளால ் ( இந்தியா நீங்கலா க) முயற்சி செய்யப்பட்டுக் கொண்டுதான் வரப்படுகிறத ு. ஆனால் என்ன செய்வத ு? வங்கதேசத்திற்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டிற்கு வரும் கூட்டம் அபரிமிதமானத ு. அதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அல்லவ ா?

எந்த அணியாவது வங்கதேசத்தை தங்கள் நாடுகளுக்கு வரவழைத்து விளையாடுகின்றனர ா? இல்ல ை. மேற்கிந்திய அணிதான் சமீபத்தில் அழைத்தத ு. தென் ஆப்பிரிக்க ா, இங்கிலாந்த ு, ஆஸ்ட்ரேலிய ா, இந்தியா போன்ற அணிகள் வங்கதேசத்தை அழைப்பதில்ல ை. எதிர்காலப் பயணத் திட்டத்தில் ( FT P) சம வாய்ப்பு கொடுக்கப்படுவதில்ல ை. இதையெல்லாம் எந்த பத்திரிக்கையிலாவது எழுதிவிட்டு, அதன் பிறகு அந்த அணிக்காக சேவாக் கூறியதை எதிர்த்து கொதிப்படைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும ்.

வங்கதேச அணி ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும ், ஒரு நாள் போட்டியிலும் தோற்கும்போதெல்லாம் அந்த அணியின ் ' சாதன ை' களை பட்டியலிட்டு கட்டம்கட்டி எழுதி, அந்த அணி சர்வதேச கிரிக்கெட்டிற்கு லாயக்கில்லை என்பதை சூசகமாக எடுத்துரைத்து, அந்த அணியை பின்னுக்குத் தள்ளும் போக்கைத்தான் நாம் கண்டிருக்கிறோம ்.

ஜிம்பாப்வ ே, பாகிஸ்தான் நாடுகளில் உள்ள அரசியல் சூழல்களை வைத்து அந்த அணிகளையும் ஓரம் கட்டும் போக்கும் ஐ. ச ி. சி.யிடம் காணப்படுகிறத ு. இதையெல்லாம் பற்றி தார்மீக ஆவேசம் பொங்க எழுதும் இணையத் தளங்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் மட்டும்தான் சேவாக் வங்கதேசம் பற்றி கூறிய கருத்திற்கு ஆவேசம் காட்ட உரிமையுண்டு என்பதை வலியுறுத்த நமக்கும் உரிமையுண்ட ு.

நாம் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும ், கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டு என்பதெல்லாம் மலையேறிவிட்டத ு. எந்த ஒரு அணியும் எந்த ஒரு அணி மீதும் பெரிய மரியாதையெல்லாம் வைத்துக் கொள்வதில்ல ை. இது காலங்காலமாக உள்ளதுதான ். இப்போது கிரிக்கெட் விளையாட்டு அதிகாரம் துணைக் கண்டத்திற்கு மாறியுள்ளதால ், மரியாதை பற்றியும ், தன்னடக்கம் பற்றியும் திமிர் பற்றிய விளக்கங்களும் நமக்கு அளிக்கப்படுகிறத ு.

இதைக்கூறும் போது சேவாக் கூறியதை நியாயப்படுத்தியதாகக் கருத இடமில்ல ை. இதனைப் பெரிய விவகாரமாக் க, வங்கதேசத்தையும ், ஜிம்பாப்வேயையும ், பாகிஸ்தானையும ், மேற்கிந்திய தீவுகளையும ் பற்றி மோசமாக எழுதி வரும் நம்பர் ஒன ் ( உள் நாட்ட ு, வெளிநாட்ட ு) ஊடகங்களுக்கு உரிமையில்லை என்பதே நமது விண்ணப்பம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பனி நேரத்தில் ஏன் வட இந்தியாவில் கிரிக்கெட் போட்டி.. தென்னிந்தியாவுக்கு மாற்றுங்கள்: சசிதரூர்

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து.. ரசிகர்களுக்கு டிக்கெட் ரீபண்ட் கிடையாதா?

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது போட்டி ரத்து.. 5வது போட்டியில் இருந்து சுப்மன் கில் விலகல்..!

மினி ஏலத்தில் சிஎஸ்கே மிஸ் செய்த 5 பிரபல வீரர்கள்.. சோகத்துடன் ஒரு பதிவு..

சிஎஸ்கே அணிக்கு நஷ்டத்தை உண்டாக்கினாரா அஸ்வின்.. வழக்கம் போல் நகைச்சுவையுடன் பதிலடி..!

Show comments