Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டனாக தோனி நீடிக்க விரும்பவில்லை?

Webdunia
சனி, 29 மார்ச் 2014 (15:36 IST)
சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சீனிவாசன், தோனி, ஐபிஎல் சூதாட்டம் என்ற சொற்கள் கடந்த சில நாட்களாக அதிகம் புழக்கத்தில் இருந்து வருகிறது. காரணம் உச்சநீதிமன்றம் முட்கல் கமிட்டியின் ஐபிஎல் சூதாட்ட அறிக்கையை மிக சீரியசாக எடுத்துக்கொண்டு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்ததே.
 
இந்த நிலையில் இதனுடம் தோனியின் நேர்மையையும் சந்தேகிக்கும் விதமான செய்திகள் பரப்பபட்டு வருவதால் தோனி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.
 
மேலும் முட்கல் கமிட்டியிடம் தோனி, குருநாத் மெய்யப்பன் பற்றிய பொயான தகவலை கொடுத்தார் என்று வக்கீல் ஹாரிஸ் சால்வே கூறியிருந்தார்.

இதனாலும் தோனிக்கு கடும் அதிருப்தி நிலவியது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் ஆகியவற்றை தோனி துறக்க முடிவு செய்ததாக தெரிகிறது.
 
இது குறித்து அவர் பிசிசிஐ தலைவர் சீனிவாசனிடம் பேசியதாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் தோனியின் இந்த முடிவை நிர்வாகம் ஏற்கவில்லை என்றும் கூறப்ப்டுகிறது. எதுவாக இருந்தாலும் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்தவுடன் தோனி வெளிப்படையாக அறிவிக்கும் வரை கூறுவதற்கில்லை.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments