உலகில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களில் அதிக பணம் புரள்வது இந்தியா, இங்கிலாந்து ஆஸ்ட்ரேலியா ஆகிய நாடுகளிலேயே. மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிகளில் எதுவும் டப்பு பேர வில்லையாம்.
இதனால் இந்த மூவர் கூட்டணிதான் இனி கிரிக்கெட்டை நடத்துமாம். கிரிக்கெட்டில் ஐசிசிக்கு வரும் வருவாயில் 80% இந்தியா மூலமகா பல்கிப்பெருகுகிறதாம். இதனால் இந்தியா தனக்கு மேஜர் பங்கு வேண்டும் என்று கூறிவந்தது.
இதனைப்பயன்படுத்திக் கொண்ட ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் எங்கு தன் பண பலம் ஆசை வார்த்தைகளினால் மற்ற உறுப்பு கிரிக்கெட் வாரியங்களையும் பிசிசிஐ தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டுவிடுமோ என்ற அச்சத்தில் பிசிசிஐ-யையும் கூட இணைத்துக் கொண்டு கிரிக்கெட்டை நாங்கள் தான் நடத்துவோம் என்று மூவர் கூட்டணி முடிவு செய்து அதற்கான வரைவு முன்மொழிவு பிரதியையும் ஐசிசியிடம் கையளித்துள்ளனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு வந்தாலும் வங்கதேசம் மட்டும் போர்க்கொடி தூக்கியது. காரணம் தங்களது டெஸ்ட் அந்தஸ்து பறிக்கப்படுமோ என்ற அச்சம் அதற்கு! நியாயம்தானே. இதனால் அதனை உறுதி செய்து கொண்டு ஆதரித்து விடும் என்றே தோன்றுகிறது. வரைவு முன்மொழிவுக்கு இன்னும் ஒரு வாக்குதான் தேவை அதனை மூவர் கூட்டணி வென்று விடும் என்றே தெரிகிறது.
மேலும் ஐசிசி போட்டிகளான சாம்பியன்ஸ் டிராபி, உலகக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளை தங்களை கலந்தாலோசிக்காமல் எதையும் ஐசிசி செய்து விடக்கூடாது என்று பிசிசிஐ கூறியுள்ளது. அப்படி தங்களை ஆலோசிக்காமல் ஏதாவது செய்தால் ஐசிசி போட்டிகளை புறக்கணிப்போம் என்று பிசிசிஐ மிரட்டியுள்ளதக தெரிகிறது.
இதனால் இந்த மூவர் கூட்டணி ஃபார்ம் ஆகியுள்ளது. மேலும் எதிர்கால கிரிக்கெட் பயணத்திட்டங்களில் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான பேரங்களை இந்தியா தங்களிடம் விட்டுவிடவேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்துள்ளது.
காரணம் அப்போதுதான் எந்த அணியையும் இங்கு வரவழைத்து இந்த வெயிலில் 4 டெஸ்ட், 7 ஒருநாள் என்று காயடிக்கலாம் அதே வேளையில் அயல்நாடுகளில் எப்போதும் தோற்றுக் கொண்டிருக்கும் நமது அணியை சிறு தொடர்களின் மூலம் காப்பற்றிக் கொள்ளலாம்.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா தங்களிடையே இப்போது அதிகமாக ஆடி வருகிறது. இது இன்னும் உக்கரமடையும். ஏற்கனவே பாகிஸ்தான் அணி ஆஸ்ட்ரேலியா சென்று ஆண்டுகள் கழிந்துள்ளன. வங்கதேச அணியை இந்தியா இருதர்ப்பு தொடருக்கு அழைத்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிறது. முன்பு ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்தெல்லாம் சென்ற வங்கதேச அணி தற்போது ஜிம்பாவே, இலங்கை அணிகளுடன் மட்டும் விளையாடி வருகிறது.
ஐசிசி வருவாய் இந்தியாவினால்தான் அதிகம் பெருகுகிறது என்பது உண்மையாக இருந்தாலும் பதவியும், அதிகாரமும் வரும்போது பணிவும், பொறுப்பும் வரவேண்டும். அந்த பணத்தை கிரிக்கெட் ஆட்டத்தை வளர்க்க பயன்படுத்தவேண்டும்.