Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - கடகம்

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - கடகம்
, வியாழன், 19 ஜூன் 2014 (13:07 IST)
கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட நீங்கள் எப்போதும் எளிமையை விரும்புவீர்கள். சாயாகிரகங்களான இந்த ராகுவும், கேதுவும் 21. 06. 2012 முதல் 08. 1. 2016 வரை உள்ள காலகட்டத்தில் உங்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். 
 
இராகுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு வீண் பழியையும், மனதில் ஒருவித அச்சத்தையும், உங்களுக்கும் தாயாருக்கும் இடைவெளியையும் ஏற்படுத்திய ராகுபகவான் இப்பொழுது ராசிக்கு 3-ம் வீட்டிற்கு வந்தமர்தால் இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சவால்கள், விவாதங்களிளெல்லாம் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். 
 
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு கட்ட சி. எம். டி. ஏ. , எம். எம். டி. ஏ ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். 
 
கடந்த கால அனுபவங்களை பயன்படுத்தி அனுபவ அறிவாலும், யதார்த்தமான பேச்சாலும் வி. ஐ. பிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். ஊர் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு அவற்றை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சொந்தம்-பந்தங்கள் மதிக்கும் அளவிற்கு நடந்து கொள்வீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்தரப்பினர் வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஷேர் மூலமாக பணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். பழைய கடன் பிரச்னைகள் தீரும்.  
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜுவனாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் வேலைக் கிடைக்கும். தடைகள் நீங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் மதிப்பார்கள். 
 
ராசிநாதனான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பேச்சில் கனிவு பிறக்கும். சமையலறை, படுக்கை அறையை நவீனமாக்குவீர்கள். பழுதான டி. வி. , ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களை மாற்றுவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவி உங்கள் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். 
 
ராகுபகவான் உங்களின் தனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். பால்ய நண்பர்களால் பலனடைவீர்கள். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். நீண்ட நாட்களாக போக வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். 
   
மாணவ-மாணவிகளே! பொது அறிவுத் திறன் வளரும். மதிப்பெண் கூடும். உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணர்வர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். ஆசிரியின் அன்பை பெறுவீர்கள். இசை, ஓவியம், விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். 
 
கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தள்ளிப் போன கல்யாணம் முடியும். பெற்றோர் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வேலைக் கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். 
 
கலைத்துறையினரே! பரபரப்பாக காணப்படுவீர்கள். யதார்த்தமான படைப்புகளால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களின் கற்பனைத் திறன் வளரும். 
 
வியாபாரிகளே! கூடுதல் லாபம் கிடைக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்திற்கேற்ப முதலீடு செய்வீர்கள். வேலையாட்கள் விசுவாகமாக நடந்துக் கொள்வார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வர வாய்ப்பிருக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். ரியல் எஸ்டேட், துணி, காய், கனி , ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். சிலர் புது கிளைகள் அல்லது தொழில் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் இருந்த தொந்தரவுகள் விலகும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். 
 
உத்தியோகஸ்தர்களே! உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். அவர்களின் நிறை, குறைகளை சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பதவி உயர்விற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல பொறுப்பில் அமர வாய்ப்பிருக்கிறது. மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.   

கேதுவின் பலன்கள்: 
 
இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து அடுத்தடுத்த வேலைகளால் பதட்டத்தையும், உத்தியோகத்தில் இடமாற்றத்தையும், அவமானங்களையும் சந்திக்க வைத்த கேதுபகவான் இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால் மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். குடும்ப வருமானத்தை உயர்த்த அதிகம் உழைப்பீர்கள். 
 
ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் பேசுபவர்களால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனம் அறிந்து இனி செயல்படத் தொடங்குவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் நிறைவேற்றிவிடுவீர்கள். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். ஆனால் தந்தையாருடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். அவருக்கு இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல், சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்துப் போகும். 
 
தந்தைவழி சொத்துகளைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். 
 

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்களின் விரையாதிபதியும்-சேவகாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் மனோபலம் கூடும். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பயணங்களால் பயனடைவீர்கள். புதியவரின் நட்பால் மகிழ்ச்சியடைவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உங்களைக் குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களையெல்லாம் ஒதுக்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.    
 
உங்கள் சப்தம-அஷ்டமாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் உள்மனதில் ஒருபயம், சின்ன சின்ன போராட்டம், விபத்துகள், கை, கால் மரத்துப் போகுதல், உடம்பில் இரும்பு, கால்சியம் சத்து குறைபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.  
 
  கேதுபகவான் பாக்யாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் அடிப்படை வசதிகள் பெருகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிதுர்வழி சொத்தைப் போராடி பெறுவீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 
 
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். வேலையாட்களிடம் கறாராக இருக்க வேண்டாம். உத்தியோகத்தில் இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். அலுவலக ரகசியங்களை வெளியிட «ண்டாம். வேறு சில நல்ல வாய்ப்புகளும் வரும். பதவி உயர்வை எதிர்ப்பார்க்கலாம். 
 
இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியில் ராகுவால் திடீர் யோகமும், செல்வாக்கும் பெற்றாலும் கேதுவால் அலைச்சலும், செலவினங்களும் வந்துச் செல்லும். 
 
பரிகாரம்
 
மன்னார்குடிக்கு அருகே உள்ள பாமணி நாகநாதரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள். 

Share this Story:

Follow Webdunia tamil