Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகரம் - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மகரம் - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
, திங்கள், 28 டிசம்பர் 2015 (17:20 IST)
களங்கமில்லாத பேச்சிற்கு சொந்தக்காரர்களே! உங்களின் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான செவ்வாய் பகவான் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த 2016-ம் ஆண்டு பிறப்பதால் வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். தாயாருக்கு இருந்த மூட்டு வலி, சர்க்கரை நோய் விலகும். பழைய கடனை பைசல் செய்ய வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வீட்டை உங்கள் ரசனைக் கேற்ப அழகுப்படுத்தி, விரிவுப்படுத்துவீர்கள். அதிக சம்பளத்துடன் எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ஆனால் எட்டாவது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலும், உடல் நலக் குறைவும், வீண் விரையங்களும் வந்துப் போகும். கௌரவச் செலவுகள் மற்றும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வாகனத்தை இயக்கும் போது கவனத்தை சிதறவிடாதீர்கள்.
 
27.02.2016 முதல் 09.09.2016 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்துச் செல்லும். தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள்.
 
அசைவம் மற்றும் கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். உணர்ச்சிவசப்பட்டு யாரையும் ப¬த்துக் கொள்ளாதீர்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது மூச்சுப் பிடிப்பு, வாயுக் கோளாறு, இரத்த சோவை வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் செய்த துரோகங்களையெல்லாம் நினைத்து கவலைப்பட்டு நிம்மதியை இழந்து விடாதீர்கள்.
 
இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப ஸ்தானத்திலேயே வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களை தலைநிமிர வைக்கும். செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமைக் கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிப்புகுவீர்கள். அனுபவப்பூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். தள்ளிப் போன பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
 
அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். கடன் பிரச்சனைகள் ஓயும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பிற மொழிப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். சுயத்தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். ரோட்டரி மற்றும் லயன்ஸ் கிளப் போன்றவற்றில் சேர்ந்து பொது நலத் தொண்டுகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
 
வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். சொந்த-பந்தங்கள் மெச்சும்படி நடந்துக் கொள்வீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலைக் கிடைக்கும். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். உங்களை அவமானப் படுத்தியவரெல்லாம் வலிய வந்து மன்னிப்பு கேட்பார்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்களை விட வயதில் குறைந்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.
 
08.01.2016 முதல் ராகு எட்டில் மறைவதால் அல்லல் பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். தடைபட்ட காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும். அடிக்கடி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த பிதுர்வழி சொத்தில் இருந்த சிக்கல் தீரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உங்களை சிலர் குறைத்து மதிப்பீடார்களே! இப்பொழுது அவர்கள் ஆச்சர்யப்படும்படி பல விதங்களில் சாதிப்பீர்கள்.
 
கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களிடம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்து நீங்கும். சிலர் உங்களை தவறான பாதைக்கு தூண்டுவார்கள். பொய்யான விளம்பரத்தை கண்டு ஏமாறாதீர்கள். ரிசர்வு வங்கியின் அனுமதிப் பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள். மற்றவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
 
08.01.2016 வரை கேதுவும் ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைவதால் சாணக்கியத் தனமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். ஆனால் சிலர் நீங்கள் பேசுவதை தவறாக புரிந்து கொண்டு சண்டைக்கு வருவார்கள். இடம், பொருள் ஏவலறிந்துப் பேசப்பாருங்கள். பல் வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். கடந்த கால கசப்பான அனுபவங்களை நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள்.
 
புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை உங்களின் தைரியஸ்தானாதிபதியும்-விரையாதிபதியுமான குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் மனதில் தொக்கி நிற்கும் தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வளைந்துக் கொடுத்தால் வானம் போல் உயரலாம் என்பதை உணருவீர்கள்.
 
தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கோவில் கோவிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மனைவிவழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.
 
ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ல் மறைந்திருப்பதால் அலைச்சலுடன் ஆதாயத்தை தருவார். பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் துரத்தும். உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும், பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளப் பாருங்கள். இல்லையென்றால் அதுவே உங்களுக்கு எதிராக முடிய வாய்ப்பிருக்கிறது.
 
உங்களைச் சுற்றியிருப்பவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை அறிவீர்கள். புதிதாக சிக்கல்கள் ஏதுவும் வருமோ என்ற அச்சமும் மனதில் அடிக்கடி வந்துப் போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். அசதி, சோர்வு வந்து நீங்கும். எல்லாப் பிரச்னைகளுக்கும் மற்றவர்களை நீங்கள் காரணம் கூறுவது அவ்வளவு நல்ல தல்ல. ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். பாஸ்போட்டை புதுப்பிக்க தவறாதீர்கள். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.
 
வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்கு பண உதவிகள் கிடைக்கும். அவ்வப்போது சின்ன சின்ன நட்டங்களும் வரக்கூடும். வாடிக்கையாளர்களிடம் சிடுசிடுவென பேசும் பணியாளை நீக்கி விட்டு அன்பாக அரவணைப்பாக பேசும் வேலையாட்களை நியமானம் செய்வீர்கள். சின்ன இடத்தில் அவஸ்தைப் பட்டீர்களே! பெரிய இடமாகவும் மக்கள் கூடும் முக்கிய இடமாகவும் புது கடை அமையும். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, ஜீவல்லரி, ஆட்டோ-மொபைல்ஸ் வகைகளால் பணம் சம்பாதிப்பீர்கள். பிரச்சனை தந்த பங்குதாரரை நீக்கி விட்டு உங்களுக்கு ஒத்துழைப்பு தருபவர்களை பங்குதாரர்களாக சேர்ப்பீர்கள். அரசாங்கக் கெடுபிடிகள் தளரும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.
 
உத்யோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. உங்களின் கோரிக்கையை நேரடி மூத்த அதிகாரி ஏற்றுக் கொள்வார். என்றாலும் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள்.
 
கன்னிப் பெண்களே! கலங்காதீர்கள். கண்ணுக்கழகான கணவர் வந்தமைவார். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். காதல் விவகாரத்தில் தெளிவு பிறக்கும். பள்ளி, கல்லூரி கால தோழிகளை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! பாடப் புத்தகத்தில் தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மதிப்பெண் கூடும். உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணர்வர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள்.
 
கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.
 
அரசியல்வாதிகளே! மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுவீர்கள். தலைமையின் வாரிசுகள் உங்களுக்கு தனிப்பட்ட வகையில் உதவுவார்கள்.
 
விவசாயிகளே! கூட்டுறவு வங்கியில் லோன் கிடைக்கும். பழைய கடனை அரசு தள்ளுபடி செய்யும். நெல்,கரும்பு உற்பத்தியால் லாபமடைவீர்கள். வீட்டில் விசேஷம் நடக்கும்.
 
ஆகமொத்தம் இந்த 2016-ம் ஆண்டு சின்ன சின்ன ஏற்றத் தாழ்வுகளை கொடுத்து வந்தாலும் உங்களின் வளர்ச்சி பணிகள் தொய்வில்லாமல் தொடர்வதாக அமையும்.
 
பரிகாரம்:
 
சுவாமிமலை முருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil