Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தவாசி எழுத்தாளர் மு.முருகேஷூக்கு பாராட்டு-பரிசு

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2015 (05:24 IST)
நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான பாராட்டும் பரிசும் வந்தவாசி எழுத்தாளர் மு.முருகேஷூக்கு வழங்கப்பட்டது.


 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 18ஆவது ஆண்டு புத்தகக் கண்காட்சி நெய்வேலி புத்தகக் கண்காட்சி அரங்கில் தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி ஜூலை 12ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
 
இக்கண்காட்சியில் நாள்தோறும் ஏதேனும் ஒரு படைப்பிலக்கியத் துறையில் சிறந்து விளங்கும் எழுத்தாளர் ஒருவருக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்படும்.
 
அந்த வகையில், குழந்தை இலக்கியத்தில் தொடர்ந்து சிறப்பான முறையில் படைப்புகளை படைக்கும் எழுத்தாளர் மு.முருகேஷூக்கு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சுபாஷ் சந்திர பாரிஜா பாராட்டுச் சான்றிதழையும், ரூபாய்.5 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கிப் பாராட்டினார்.
 
எழுத்தாளர் மு.முருகேஷ் இதுவரை 8 கவிதை நூல்களையும், 6 ஹைக்கூ கவிதை நூல்களையும், 10 சிறுவர் இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். பல இலக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.
 

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

Show comments