ஒரு குழந்தையின் வளர்ப்பில் அவர்களது பெற்றவர்கள்தான் தற்போது முக்கிய இடத்தில் உள்ளனர். எனவே, குழந்தைக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டியதும் அவர்கள்தான். ஆனால் குழந்தைகளுக்கு சொல்வது ஒன்றும், தாங்கள் செய்வது ஒன்றுமாக இருக்கக் கூடாது.
WD
பெற்றோர், தங்களிடம் ஏதேனும் குறை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அதனை மாற்றிக் கொள்ளுங்கள். குழந்தைகள் எதிரில் யாரைப் பற்றியும் மரியாதைக் குறைவாகப் பேச வேண்டாம். கடுமையான சொற்களையும் பயன்படுத்த வேண்டாம்.