இன்று மகாகவி பாரதியாரின் 127வது பிறந்த நாள் விழா தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது.
பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, காலை 9 மணிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள திருவுருவச் சிலைக்கு அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
தனது எழுத்துக்களின் மூலம் பாமர மக்களுக்கும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய மகாகவி பாரதியாரின் கவிதைகளை இந்த நாளில் நினைவு கூர்வோம்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையார் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது முச்சினிலே (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ் நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போலிளங் கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு (செந்தமிழ்) கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு - நல்ல பல்வித மாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசுந் தமிழ் நாடு (செந்தமிழ்) வள்ளுவன் தன்னை உல கினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி யாரம் படைத்த தமிழ் நாடு (செந்தமிழ்)