Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன் மொழிக‌ள் மூல‌ம் வ‌ழிகா‌ட்ட‌ல்

பொன் மொழிக‌ள் மூல‌ம் வ‌ழிகா‌ட்ட‌ல்
, திங்கள், 26 அக்டோபர் 2009 (15:17 IST)
இ‌ங்கஉ‌ள்பொ‌‌ன்மொ‌ழிக‌ளை‌பபடி‌த்தஅத‌ற்க‌ே‌ற்றவாறவாழு‌ங்க‌ள்.

நீ என்ன நினைக்கிறாயோ அது உன்னால் இயலாமல் போகும்போது உன் ரத்தத்தில் ஜனித்த ஜீவன் அதைச் சாதித்துக் காட்டிவிடும் -கிரந்தம்.

பிறர் பாரத்தை தாங்க கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானே குறைந்துவிடும் -அவ்பரி.

கவலை நம் சவப்பெட்டிக்கு ஓர் ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியை கழற்றுகிறது -பீட்டர்.

தவறு கூடுதலாயிருந்தால் பிடிவாதமும் அதிகமாக இருக்கும் -நெல்சன்.

தன் கணவருக்கு துன்பம் வரும்போது மனம் பதையாத பெண்கள் அவர் மடியில் நெருப்பிற்கு ஒப்பாவர் -அவ்வையார்.

தவறான பதிலைக்காட்டிலும் மவுனம் சிறந்தது.

எதிரியைவிட நாக்கையே அதிகம் அடக்க வேண்டும்.

வெற்றிக்கான சாலையில் தொடர்ந்து வேலை நடந்து வரும்.

கனவு காண்பதுடன் காரியத்தில் இறங்குவதே சாதனைக்கான சாலை.

சிறந்தவையெல்லாம் நல்லவையல்ல. நல்லவையெல்லாம் சிறந்தவையே.

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும் - கான்பூசியஸ்.

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் - சுபாஷ் சந்திரபோஸ்

தன்னிடம் தானே நம்பிக்கை இழப்பது இறைவனிடம்ட நம்பிக்கை இழப்பதாகும் - விவேகானந்தர்.

ஒவ்வொரு சாதனையும் மற்றவர்கள் முறியடிப்பதற்காகவே செய்யப்படுகின்றன - சுனில் கவாஸ்கர்

புத்தகங்கள் மனிதப் பிறவிகள் அல்ல. ஆயினும் அவை என்றென்றும் உயிருடன் இருக்கின்றன - பென்னெட்.

உண்மை, அன்பு, அறம், ஒழுக்கம், அச்சமின்மை இவையே எனது வழிகாட்டிகள். இறைவனின் உண்மையான வடிவங்கள் இவையே - காந்திஜி.

செய்த வினையும், செய்கின்ற தீவினையும் ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டாது - கண்ணதாசன்.

உங்களுக்குத் தெரிந்த கல்வியை, கலையை அடிக்கடி உபயோகித்தால் அறிவும் செல்வமும் உயரும் - அப்பிரிக்க முதுமொழி.

Share this Story:

Follow Webdunia tamil