Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய இரட்டை குழந்தைகளை பிரிக்க அறுவை ‌சி‌கி‌ச்சை?

இந்திய இரட்டை குழந்தைகளை பிரிக்க அறுவை ‌சி‌கி‌ச்சை?
, செவ்வாய், 21 ஏப்ரல் 2009 (12:44 IST)
சி‌ங்க‌ப்பூ‌ரி‌ல் இ‌ந்‌திய இர‌‌ட்டை‌க் குழ‌ந்தைகளை‌ப் ‌பி‌ரி‌க்க அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்ய வே‌ண்டா‌ம் எ‌ன்று அ‌ந்நா‌ட்டு சுகாதார‌த் துறை அமை‌ச்ச‌ர் கே‌ட்டு‌க் கொ‌‌ண்டதை‌த் தொட‌ர்‌ந்து அறுவை ‌சி‌கி‌ச்சை நடைபெறுமா எ‌ன்பது கே‌ள்‌வி‌க்கு‌றியா‌கியு‌ள்ளது.

இந்திய மா‌நில‌ம் ஆந்திராவை சேர்ந்த சிறுமிகள் வாணி, வீணா. இவர்கள் இருவரும் 5 வயது உடையவர்கள். இவர்கள் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் ஆவார்கள். இவர்களை அறுவை ‌சி‌கி‌ச்சை செய்து பிரிக்கவேண்டும் என்று சிஙகப்பூரில் உள்ள டாக்டர் கெய்த் கோக்கை ஆந்திர அரசு கேட்டுக் கொண்டது. இதை தொடர்ந்து அவர்கள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு உள்ள ஈஸ்ட் ஷோர் மரு‌த்துவமனை‌யி‌ல் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் அறுவை ‌சி‌கி‌ச்சை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இந்த அறுவை ‌சி‌கி‌ச்சையை செய்ய வேண்டாம் என்று மரு‌த்துவமனை ‌தலைமை மரு‌த்துவரை அந்த நாட்டு சுகாதார அமை‌ச்ச‌ர் காவ் கூன் வான் கேட்டுக்கொண்டார்.

இந்த அறுவை ‌சி‌கி‌ச்சை குழந்தைகள் உயிருக்கு ஆபத்தாக முடியும். எனவே இதை செய்ய வேண்டாம் என்று மரு‌த்துவ‌ர் கெய்த் கோக்கை அமை‌ச்ச‌ர் கேட்டுக் கொண்டார். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் சிலரை பிரிக்காமல் இருப்பதே நல்லது. இயற்கையின் போக்கை மாற்ற முயல்வது நல்லதை விட கெடுதலையே செய்யும் என்றும் அவர் கூறினார்.

சில நேரங்களில் இருவரில் ஒருவரை தான் மரு‌த்துவ‌ர்களா‌ல் காப்பாற்ற முடியும். அறுவை ‌சி‌கி‌ச்சை மூலம் 2 பேருமே காப்பாற்றப்பட்டாலும், அவர்கள் மூளை சேதம் அடைந்து நல்ல வாழ்க்கை வாழ தகுதி அற்றவர்களாகி விடுவார்கள் என்றும் மந்திரி கூறினார்.

இதற்கு மரு‌த்துவ‌ர் கெய்த் கோக் சம்மதிக்கவில்லை. அறுவை ‌சிக‌ி‌ச்சை செய்வதற்கு முன்பாகவே அதுதோல்வியில் தான் முடியும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எ‌ன்று ப‌‌தில‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் அறுவை ‌சி‌கி‌ச்சை நடக்குமா நடக்காதா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil