Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தானத்திற்குரிய பலனை பெற பொறுமையுடன் காத்திருங்கள்!

Webdunia
பாம்பன் சுவாமிகள் வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ  நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார்.
 

 
முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய  சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை,  திருவான்மியூரில் உள்ளது.
 
அவருடைய ஆன்மிக சிந்தனைகளின் துளி.....
 
அரிது, அரிது மானிடராக பிறத்தல் அரிது' என்று புலவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். இந்த மனிதப்பிறவி எவ்வளவு நல்ல  விஷயமோ அதே அளவிற்கு அஞ்சத்தக்க விஷயமும் ஆகும். ஏனெனில், மனிதர்கள் தங்கள் செய்கையால் இந்த பிறவியை  மேலாகவோ, கீழாகவோ செய்கிறார்கள். நல்லதைச் செய்தால் இதைவிட நற்பிறவி கிட்டும். தீமையை செய்தால் மீண்டும்  விலங்காகப் பிறக்க வேண்டி வரும்.
 
ஒரு மனிதனின் தயவைப் பெறுவதற்குக்கூட நீண்டநாள் போராடுகிறீர்கள். அரசாங்கத்தின் தயவு வேண்டுமானால் இன்னும்  அதிகநாள் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சாதாரண ஜென்மங்களுக்கே இப்படி காத்திருக்க வேண்டியது என்றால், கடவுளின்  அருளைப் பெறுவதற்கு எவ்வளவுநாள் காத்திருக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே அவரது  கருணையைப் பெற பொறுமையுடன் காத்திருங்கள். மிகப்பெரிய பலன் கிடைக்கும்.
 
பாவம் செய்யும்போது எப்படி மறைவாக செய்கிறீர்களோ அதேபோல மிகுந்த புண்ணியமான அன்ன தானத்தையும் எவ்வித  தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும். அப்படியானால்தான் அந்த தானத்திற்குரிய பலன் வெகுவாக கிடைக்கும்.
 
- பாம்பன் சுவாமிகள்

வைகாசி விசாகத்தின் சிறப்புகள் என்னென்ன?

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும்! - இன்றைய ராசி பலன் (18.05.2024)!

முருகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்! - இன்றைய ராசி பலன் (17.05.2024)!

முட்டுச்சந்தில் விநாயகர் சிலை வைப்பது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments