ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்!

Webdunia
இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.  1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

 
* துருப்பிடித்து தேய்வதை விட, உழைத்து தேய்வது மேலானது. மன உறுதியோடு உழைத்து வாழுங்கள்.
 
* ஒருவரிடம் அன்பு இல்லாவிட்டால், அவரிடம் எவ்வளவு கல்வி ஞானம் இருந்தாலும் கடவுளை அடைய முடியாது.
 
* இறைவனுக்கு உருவமில்லாமல் இருக்கலாம். ஆனால் உருவ வழிபாடு கேலிக்குரியதல்ல.
 
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும்  மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
 
* நீ கடலை கடக்க விரும்பினால் இரும்பைப் போன்று மன உறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும். மலைகளைத் துளைத்துச்  செல்வதற்கு போதுமான வலிமை உனக்கிருக்க வேண்டும்.
 
* மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்க வேண்டும் என்பது தெரிந்து கொண்டால் உலகம்  தனது ரகசியங்களை வெளியிடத்தயாராக இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்துபவனுக்கே வலிமை கிட்டும். உள்ளத்தின்  ஆற்றலுக்கு எல்லையே இல்லை.
 
- விவேகானந்தர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலுக்கு போறீங்களா?!.. டோக்கன் மற்றும் தங்கும் அறைகள் விபரம்!..

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments