Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குருநானக் உணர்த்தும் சிறு ஊசி கூட உடன் வராது

குருநானக் உணர்த்தும் சிறு ஊசி கூட உடன் வராது

Webdunia
பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற குருநானக் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் குருநானக் தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.

 
இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்தை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள், என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார்.
 
சற்று யோசித்த குருநானக் ரொம்ப நல்லது அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே என்று கேட்டார்.
 
“என்ன சுவாமி எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள் . செய்ய காத்திருக்கிறேன்” என்றார் பணக்காரர்.
 
தன் கையில் இருந்து ஊசி ஒன்றை எடித்த குருநானக், அதை பணக்காரரிடம் நீட்டினார்.
 
“இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும் மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும்” என்றார் குருநானக்.
 
“இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வரமுடியும்” என்று கேட்டார் பணக்காரர்.
 
அவரைப் பார்த்து சிரித்த குருநானக், இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை பேசுகிறீர்களே....ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும். செல்வத்தால் யாரும் கர்வப்படத் தேவையில்லை. அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும், என்று அறிவுரை கூறினார்.

இந்த ராசிக்காரர்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (19.05.2024)!

வைகாசி விசாகத்தின் சிறப்புகள் என்னென்ன?

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும்! - இன்றைய ராசி பலன் (18.05.2024)!

முருகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்! - இன்றைய ராசி பலன் (17.05.2024)!

Show comments