தோற்பதற்காக நீங்கள் எந்த விளையாட்டையும் விளையாடுவதில்லை, ஜெயிப்பதற்காகத்தான் விளையாடுகிறீர்கள், ஆனால் நீங்கள் தோற்றாலும் அது உங்களுக்குப் பரவாயில்லை. இந்த அடிப்படையான விஷயத்தை வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் கடைபிடித்தால், உங்கள் வாழ்க்கை விளையாட்டுதான். இதைத்தான் இந்த உலகம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது.
நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், உங்கள் வாழ்க்கை விளையாட்டுதான். ஒரு விளையாட்டின் புனிதமே விளையாடுபவர்கள் தங்கள் எல்லைகளை தகர்த்து, தடைகள் அற்ற அந்த நிலையை உணர்வதுதான்.
ஆன்மீகத்தின் உச்சத்தில்தான் பொதுவாக இந்த நிலை உணரப்படுகிறது. இதனால்தான் ஈஷாவின் அத்தனை விஷயங்களிலும் விளையாட்டு ஓர் அங்கமாக இருக்கிறது, அத்தனை வகுப்புகளிலும் விளையாட்டு ஒரு பாகமாக இருக்கிறது.