சென்னை மாநகரின் மத்திய பகுதியான சூளையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயம் பொதுவான அங்காளப் பரமேஸ்வரி ஆலயங்களில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது.
அம்மன் என்றதும் உக்கிரமாகவோ, நின்ற கோலத்திலோ அல்லாமல், தன் குழந்தையான பாவாடைராயனை தனது மடியில் வைத்து காட்சி தரும் இந்த அம்மன், குழந்தை இல்லாத தம்பதியரின் மனக் குறைகளை போக்கி, அவர்களுக்கு குழந்தை பாக்கியம் அளிக்கிறார்.
அங்காளபரமேஸ்வரி - காசி விசுவநாத சுவாமி கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோயிலுக்கு வரும் குழந்தையில்லாத் தம்பதிகள், கோயிலில் பூஜித்துத் தரும் எலுமிச்சையை பிரசாதமாக உண்கிறார்கள்.