Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாமிமலை முருகன் மயில் வாகன உலா – குவியும் பக்தர்கள்

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (13:35 IST)
ஆடிக்கிருத்திகை நாளான இன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், வேண்டுதல்களும் நிறைவேற்றுவது வழக்கம். சுவாமிமலை முருகன் கோவிலில் இதனால் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளது.

அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையில் இன்று பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முருகனை வழிபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதிலிருந்தும் சுவாமிமலைக்கு பக்தர்கள் கூட்டம் வந்தபடி இருக்கிறது.

இன்று அதிகாலை 5 மணிக்கே நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இன்று மாலை முருகன் மயில் வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு தெப்பத்திருவிழா நடைபெற இருக்கிறது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வந்து கொண்டிருக்கும் நிலையில் முன்னேற்பாடுகளை செய்துள்ளது கோவில் நிர்வாகம்.

தொடர்புடைய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்பக்குளத்தின் சிறப்புகள்

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (04.05.2024)!

மீனாட்சி அம்மன் கோவிலில் வன்னிமரத்தடி விநாயகர் கோவில்

இந்த ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கும்! - இன்றைய ராசி பலன் (03.05.2024)!

வன்னி மரத்தை வணங்குவதால் ஏற்படும் பலன்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments