Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூபர் இர்பானின் கார் மோதி விபத்து- ஆர்.டி.ஓ பரிசோதனையில் சிக்கல்

Webdunia
திங்கள், 29 மே 2023 (21:10 IST)
யூடியூபர் இர்பானின் சொகுசு காரை செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்ற போலீசார், உரிய ஆவணங்களை வழங்காததால் திருப்பி அனுப்பியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பிரபல யூடியூபர் கார் மோதி பத்மாவதி என்ற  55 வயது  பெண் ஒருவர் பலியானார். இந்த காரை அவரது மைத்துனர் அசாருதீன் ஓட்டியதால் அவர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சிசிடிவி காட்சியின் மூலம் விபத்துக்குள்ளான காரில் இர்பான் பயணம் செய்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் விபத்து தொடர்பாக கார் ஓட்டுனர் அசாருதீன் மீது மட்டும் 304 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யூடியூபர் இர்பான் மீது தற்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய யூடியூபர் இர்பானின் சொகுசு காரை செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்ற போலீசார், உரிய ஆவணங்களை வழங்காததால் திருப்பி அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments