Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூபர் இர்பானின் கார் மோதி விபத்து- ஆர்.டி.ஓ பரிசோதனையில் சிக்கல்

Webdunia
திங்கள், 29 மே 2023 (21:10 IST)
யூடியூபர் இர்பானின் சொகுசு காரை செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்ற போலீசார், உரிய ஆவணங்களை வழங்காததால் திருப்பி அனுப்பியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பிரபல யூடியூபர் கார் மோதி பத்மாவதி என்ற  55 வயது  பெண் ஒருவர் பலியானார். இந்த காரை அவரது மைத்துனர் அசாருதீன் ஓட்டியதால் அவர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சிசிடிவி காட்சியின் மூலம் விபத்துக்குள்ளான காரில் இர்பான் பயணம் செய்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் விபத்து தொடர்பாக கார் ஓட்டுனர் அசாருதீன் மீது மட்டும் 304 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யூடியூபர் இர்பான் மீது தற்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய யூடியூபர் இர்பானின் சொகுசு காரை செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்ற போலீசார், உரிய ஆவணங்களை வழங்காததால் திருப்பி அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments