Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

Siva
புதன், 21 மே 2025 (16:01 IST)
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, ஹரியானாவை சேர்ந்த யூடியூப்பர்  ஜோதி மல்கோத்ரா கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், அதேபோல் வேறு சில யூடியூபர்களையும் காவல்துறை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் சிலர் தமிழக யூடியூபர்கள் என்றும் கூறப்படுவதால், அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீப காலமாக, சில சர்ச்சைக்குரிய செயல்களை செய்து, ஆளும் கட்சியின் ஆதரவால் தப்பித்து வருகிற யூடியூபர் ஒருவரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 
 
அதேபோல், தமிழகத்திலேயே அதிக ஃபாலோயர்களை வைத்து கொண்டு பொது பிரச்சனைகளை அலசி வீடியோக்களை வெளியிட்டு வருகிற நபர் ஒருவரையும் விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
யூடியூபர்கள் தங்கள் வருமானத்திற்காக எல்லை மீறி சில செய்திகளை வெளியிட்டு வருகிற சூழ்நிலையில், இனிமேல் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, யூடியூபர்களை கட்டுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments