Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களை வைத்து ஏன் இதை செய்கிறீர்கள் – அதிகாரியை அறைந்த இளைஞர் கைது !

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (08:35 IST)
சேலத்தில் மாணவர்களை வைத்து டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட துணை ஆட்சியரை அறைந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள கூணான்டியூர் ஊராட்சியில் பள்ளி மாணவர்களை வைத்து துணை ஆட்சியர் சுசிலா ராணி டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது அங்கு வந்த பிரபாகர் எனும் இளைஞர் ’ அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை ஏன் மாணவர்கள் மீது திணிக்கிறீர்கள், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அதிகாரிகள் அரசின் அறிவுறுத்தலின் படியே விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெறுவதாக கூறியுள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் வாக்குவாதம் நிகழ அங்கு நடப்பவற்றை பிரபாகர் செல்போனில் படம் பிடித்துள்ளார். அப்போது அதிகாரி அவரது செல்போனைத் தட்டிவிட அது கீழே விழுந்து உடைந்துள்ளது. இதனால் கோபமான அந்த இளைஞர் பெண் அதிகாரியை அறைந்துள்ளார்.

இதனடிப்படையில் அதிகாரி சுசிலா ராணி அளித்த புகாரின் பேரில் பிரபாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments