Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
வெள்ளி, 26 ஜூலை 2024 (11:42 IST)
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை பாலத்தின் அருகில் நிறுத்திவிட்டு திடீரென பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அந்த இளைஞரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அதன் பின்னர் போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த சம்பவத்தில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மும்பையில் இதே போல் ஒருவர் மேம்பாலத்தில் தனது காரை நிறுத்திவிட்டு திடீரென காரில் இருந்து இறங்கி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று சென்னையில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments